Saturday, December 28, 2013

இல்லாமை என்றுமில்லை ...!!!



வேகமாய் சுழலும் பூமியில் 

ஒருவன் வேதனை அறிய எவனுமில்லை …


காசுக்காக ஓடும் கால்களுக்கிடையில் 

கண்ணுயர நேரமில்லை …


நட்சத்திர விடுதியின் உணவுக்கிடையில் 

அன்னையின் சமையல் ருசிக்கவில்லை …


நாகரிகவாதிகள் என்றுரைப்போம் 

நட்சத்திர விடுதியில் நாய்களுக்கும்

எங்களுக்கும் தூரமில்லை …


நெற்களஞ்சியம் தஞ்சை என்றோம் 

நஞ்சை புஞ்சை யெல்லாம் காணவில்லை …


தமிழகத்தில் அயலவர் அலுவலகம் 

தமிழ் பேசும் தமிழனுக்கு வேலையில்லை  …


எம் தேசத்தில் இல்லாமை என்றுமில்லை
ஊரெங்கும் உரக்க முழக்கமிட்டோம்

முப்பொழுதும் ஓடி                

மூன்று  வேலை  உணவோடு 

ஒரு  குண்டுமணி  தங்கமும் 

எங்கள்  சேமிப்பில்  இல்லை …!!!

நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

 

No comments :

Post a Comment