Friday, December 20, 2013

சூட்சமம் அறியேன் ...



சூது அறியும்
சூட்சமம் கொஞ்சம்
உணர வை இறைவா...!!!

வஞ்சகம் கொண்ட
நெஞ்சத்தை என்னிடம்
விலக்கி வை இறைவா ...!!!

விஷ வார்த்தைகள்
கக்கும் பிராணிகள்
அறவே அகற்றி வை இறைவா ...!!!
 

நயமாய் பேசி
போலியாய் நடிக்கும் நரிகள் 
அண்டாதிருக்க வை இறைவா ...!!!
 

சுயநலம் கொண்டே சுற்றம் கெடுக்கும்
உறவுகள் ஒருபோதும்
ஒட்டாதிருக்க வை இறைவா ...!!!
 

வஞ்சகர்கள் கூடி
எனை இம்சித்தாலும்
எவற்றையும் வெல்லும்
இரும்பு இதயம்
எனக்காய் வேண்டும் இறைவா ...!!!
 

எவரிடம் என் தோழமையாயினும்
சன்றோனை சீண்டாத
சிந்தனை போதும் இறைவா ...!!!

நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

No comments :

Post a Comment