Tuesday, January 7, 2014

தமிழ்த்தாய் – தமிழன் – நான் ...


செவிட்டுக்கிழவியிடம்  கவிதை  வாசித்தேன்
சிரித்துக்கொண்டே  முத்தமிட்டாள்
நான் அணைத்துக்கொண்டு அழுதுமுடித்தேன் …!!!

குருட்டு இளைஞனிடம்
ஓவியம்  நீட்டினேன்
தடவிப்பார்த்து  பணமா  என்றான்
கிழித்துவிட்டு  அலுவல்  நகர்ந்தேன்  …!!!

செந்தமிழ்  பைந்தமிழ்  என்னுயிர்  தமிழென்றேன்
உள்ளின்று  உறங்கியவள் 
விழித்துக்கொண்டு  பசிக்கிறதென்றாள்
தட்டுத்தடுமாறி ஆங்கிலம்  கற்றேன் …!!!

நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

No comments :

Post a Comment