Saturday, January 25, 2014

யானும் வீழ்வேனோ ... ???

 
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிகிறேன்
விண்ணைத் தொட விரைந்தே பறக்கிறேன்
விண்மீனாய் நானும் ஜொலித்திடுவேனோ
சருகாய் புவியில் சரிந்திடுவேனோ ..???
 
தொட்டில் மீனாய் துள்ளி குதிக்கிறேன்
ஆழியில் கலந்திட நிலத்தில் நீந்துகிறேன்
கடற்கரை நானும் காண்பேனோ
கல்லறை கண்டு துயில்வேனோ  ..???
 
சிறு எறும்பென நானும் ஓடுகிறேன்
தடையென மலையையும் உடைக்கிறேன்
மாளிகை எனக்காய் செய்வேனோ
மண்ணுக்குள் புதைந்தே போவேனோ ..???
 
மனிதனோடு மனிதமாய் வாழுகிறேன்
வியந்தரம் அழித்திட விளைகிறேன்
எழுத்தாணி கொண்டே எதிர்க்கிறேன்
வேகம் கொண்டே அழிப்பேனோ
என்னையும் இழந்து வீழ்வேனோ ..???
 
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

No comments :

Post a Comment