Sunday, November 3, 2013

உழவன் பிள்ளையின் உணவு ...


வானில் பூத்த நட்சத்திரங்களாய் 
வளம் பொங்கும் எம் மண்ணில் 
விளைந்த மாணிக்கங்கள் ...

வடக்கே வளமான 
வாழைத்தோப்பு ...
பத்தடியில் பார்வைக்கழகாய் 
கரும்புத் தோட்டம் ...

வானை தொடுமாறு வளர்ந்து நிற்கும் 
தென்னந் தோப்பு ...
காய்ச்சுப் போன கரங்களால்
பூத்த முல்லைப் பூக்கள் ... 

நாளெல்லாம் பாடுபட்டு 
நெல்மணி அது சேர 
மக்களின் பசி தீர 
பாடுபட்டவன் நான் ...

எப்பொழுதும் என் பிள்ளைமட்டும் 
ஒட்டிய வயிறோடு 
அரசு பள்ளியின் மதிய வேலை 
உணவுக்காய் தட்டேந்தியபடி ...

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா ...

No comments :

Post a Comment