Wednesday, November 6, 2013

பிணந்தின்னிகள் ....




பிரபாகரன் பாலச்சந்திரன் இசைப்ரியா
இன்னும் எத்தனை எத்தனை
உயிர்களடா இறைவா ...
இதயம் ரணமாய் கனத்தாலும்
வீரத்தை புதைத்த
தமிழனாய் போனோமடா .... !!!!

பச்சிளங்குழந்தை தாயின் மடி தேட
பள்ளி சிறுமிகள் நரிகளுக்கு உணவாக
ஈன பிறவிகளுக்கு என் தமிழினம் இறையாக
நெருஞ்சி முள்ளாய் நெஞ்சை கிழித்தாலும்
ஏதும் செய்யமுடியா
முடவனாய் ஆனொமடா .... !!!!


இறந்த பிணத்திலும்
காமம் தேடும் கழுகுகளே
எப்படி உரைக்க உங்களது பிறப்பை
காட்டுப்பன்றிகளுடன் புணர்ந்து
பெற்றாளோ உன் அன்னை .... !!!!

உன் தங்கை தாய்
பிள்ளை பெண்டாட்டியிடம்
இல்லாதது என்ன கண்டாயடா
இறந்த பிணங்களிடம் .... !!!!


கூர்முனை வாள் கொண்டு எங்கள்
குருதியை கொட்ட செய்திருந்தாலும்
இறக்கும் நேரத்திலும்
எடுத்துரைதிருப்போம்
நீங்கள் வீரர்களென .... !!!!

போர்க்களமா உங்களது
பிணந்தின்னிகள் வாழும்
கூடமடா அது ...
மானுடம் மறந்த
நரமாமிசம் தின்னும்
நாய்களடா நீங்கள் .... !!!!



சமர்ப்பணம் மாண்ட என் தமிழினத்திற்கு
சுப சத்யா .... !!!!

No comments :

Post a Comment