Saturday, October 5, 2013

எனக்கேன் கோபம் ... ???


சாலையில் துடிக்கும்
உயிரைக் கண்டும்
வேகமாய் விரைந்திடும்
மனிதனைக் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???

கூடி வாழ்ந்த
குடும்பங்களுக்கு மத்தியில்
விவாகரத்துக்காய் ஓடும்
தம்பதிகள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???

அனுபவ மொழிகள் அனைத்தும் 
அறவே அகன்றிட
பழமைகள் விவரிக்கும்
முதியோரை துரத்திச்  
செல்ல பிராணிகள் வளர்க்கும்
குடும்பங்கள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???

புலுப்போல் நொந்து
தானியம் படைத்திட்டே
அதை பயனற்று
பதுக்கி ஒலித்திட்டால்
எனக்கேன் கோபம் ... ???

விவசாய நிலமெல்லாம்
தரிசாய் வறண்டிட
மழை நீர் வீணாய்
கடலில் கலக்க
நிமிரச்செய்வோம் என
நிவாரணம் வழங்கிட்டால்
எனக்கேன் கோபம் ... ???

காலனாவுக்கும் கையேந்தும்
பாரத நாட்டினிலே
கோடி கோடியாய் கொள்ளையடித்திட்டால்
எனக்கேன் கோபம் ... ???
கூண் விழுந்த கிழவியும்
கூடையில் பழம்
விற்றுப் பிழைக்க
தன்னலம்  மறந்து
சுய நினைவிழந்து
மதுவில் மயங்கிடும்
இளைஞர்கள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???

காதலெல்லாம் கசப்பு மருந்தாக
கௌரவ கொலைகள்
அழகாய் அரங்கேற
நேசத்தை கொன்றிடும்
சாதியை கண்டால்
எனக்கேன் கோபம் ... ???

இந்து கிறிஸ்தவன்  
இசுலாமியனென
நாங்கள் நண்பர்களாய்  வசிக்க
மதம் வாழ 
மனிதனைக் கொல்லும்
மிருகங்கள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ??? 

பெண் தெய்வங்கள்
பேறுகொண்ட நாட்டினிலே
கன்னிகைகள்
கற்ப்பழிக்கப்பட்டாள்
எனக்கேன் கோபம் ... ???  

காக்கை குருவியும்
சுதந்திரமாய்ச் சுற்றி திரியும்
இலங்கையிலே என்
இனத் தமிழன் மட்டும்
இழிவாய் இறந்திட்டால்
எனக்கேன் கோபம் ... ???
 

எல்லை பகுதி
இதுவென சொல்லி
ஏமாந்தவன் இவன் இந்தியனென
எத்தனை வீரர்கள் இறந்தாலும்
ஊமையாய் உட்கார்ந்திருந்தால்
எனக்கேன் கோபம் ... ???
 
கண்முன்னே கயவர்களின்
கலியாட்டம் மேடை ஏறினாலும்
சொரனையற்று மந்தமாய் நகரும்
மனிதனை கண்டால்
எனக்கேன் கோபம் ... ???

ஆம் எனக்கேன் கோபம்
எங்கோ அழுபவன்
என் இணையவன் இல்லையே
எனக்கேன் கோபம் ... ???

பக்கத்துக்கு வீட்டில் 
துப்பியவன்
நம் வீட்டில் துப்பாதவரை
நமக்கேன் கோபம் ... ???

நானும்  என்  எழுத்தாணியும்
சுப சத்யா ...

எங்கிருக்கானோ என்னவன் . . .


 
தமிழனின் நிறம் கொண்டவன்
மறவனின் வீரம் நிறைந்தவன்
என்னைப்போல் எம்மொழியை நேசிப்பவன்
எவரிடத்தும் மனிதனாய் இருப்பவன் ...

விழிகளின் மொழி அறிந்தவன்
மழலையின் மனம் தெரிந்தவன்
கவிதைகளை வாசிக்கப் பிடித்தவன்
ஓவியத் தூரிகையை உணர முடிந்தவன் ...
 
இயற்கையை ரசிப்பவன்
தினமும் என்னை
காதலிப்பதாய்  இம்சிப்பவன் ...

வார்த்தைகளால் வசியம்
செய்யும் வஞ்சகன்
வழிச்சாலையைக் கடக்கையில்
என் கரங்களை கைக்கொள்பவன் ...

நண்பர்களை நேசிப்பவன்
உறவுகளை மதிப்பவன்
சொந்தங்களோடு வாழ்பவன்
எப்பொழுதும் என்னைத்
துணையாய்க் கொள்பவன் ...

அன்பில் ஆதாயம் தேடாதவன்
அரசியல் பேசுபவன்
அவ்வப்போது என்னை
பேசாமல் கொல்பவன் ...

தவறிழைத்தால் 
தலையில் கொட்டுபவன்
தீயோரை திருத்த முற்படுபவன்
தீது நன்றென பகுத்து சொல்பவன் ...

காய்ச்சலில் துயில்கையில்
கண்ணிசைக்காமல் கண்டிருப்பவன்
அன்னமிட்டபின் அமரச்சொல்லியே
அன்னையாய் எனக்கு பரிமாறுபவன் ...

அறுபது வயதிலும்
நீ அழகியடியென
கன்னங்கள் சிவக்க
வெக்கங்கள் பிறக்க
மெலிதாய் முத்தமிடுபவன் ... 
எங்கிருக்கானோ என்னவன் ..??.. 

நானும்  என்  எழுத்தாணியும்
சுப சத்யா ...