Saturday, July 6, 2013

மனிதனை மனிதனாய் பாருங்கள் சாதியனாய் அல்ல....

ஒரு சாதாரண மனிதனை
சரித்திர நாயகனாக 
ஒருபோதும் சித்தரிக்காதீர்கள் .....

காதலுக்காக குடிபோதையில்
 மடிந்த மனிதனை 
உங்கள் போராளியாக கருத்தரிக்காதீர்கள் ....

சாதியம் பேசவோ 
ஒரு மனிதனின் சாவில்
 சத்தம்போட்டு சிரிக்கவோ
 நான் சொல்லவில்லை .... 

செய்யும் தொழிலே தெய்வம்
 என்றால் நிச்சயம் 
தொழிலை கொண்டு உருவான
 சாதி ஒழிக்கப்படத்தான் வேண்டும் .....

பிறப்பு சான்றிதல் முதல்
 இறப்பு சான்றிதல் வரை 
அத்தனையிலும் சாதியம் 
வேண்டாமென களம் இறங்குங்கள் 
நானும் கை கோர்க்கிறேன் ....

இளவரசனின் மரணத்துக்காக
 போராட துடிக்கும் முற்போக்குவாதிகள் 
ஏன் திவ்யா தந்தையின் இறப்பை 
கடுகளவும் கண்டுகொள்ளவில்லை ...

இப்பொழுது கதறி அழும் நீங்கள் 
ஏன் அன்று ஒரு தகப்பனின் 
மரணத்தில் துளி அளவும்
 கண்ணீர் சிந்தவில்லை ....

இந்த மனிதநேயம் அப்பொழுது
 ஏன் மடிந்து போனது
 உங்களது சமத்துவம் 
அப்பொழுது ஏன் மரத்துப்போனது....

உங்கள் பார்வையில் 
உயர் குடியில் இறந்தால் 
அவன் சாதியவாதி ...
தாழ்குடியில் மடிந்தால்
 அவன் போராளி ...

மனிதனை மனிதனாய் பாருங்கள் 
சாதியனாய் அல்ல....

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா

Thursday, July 4, 2013

விவசாயி

சாலையோரக் காட்சிகள்

 

சாலையோரக் காட்சிகள்

வெற்றிலை போட்டுச் சொப்பில்
துப்பினால் மூதாட்டி
நகரிகமற்றவள்
என்றது சமூகம் ....
 
போதை பாக்கை
மென்று சாலையில்
துப்பினான் இளைஞன்
கண்டும் காணாமலும் நாம்...

உடலில் ஊனம்
என்றாலும் உன்னை நம்பி
நான் இல்லை என்பதுபோல் 
உழைத்து வாழும் மனிதர்கள்...

மது மாது என்றால்
மனைவியின் தாலியும்
அறுத்து சாலையில்
மதிமயங்கும் குடிமக்கள்....
 
வாங்கிய காசுக்கு
வஞ்சகம் இல்லாமல்
கவர்ச்சி காட்டும் சினிமா 
நடிகைகளின் படங்கள் சுவரொட்டியில்...
 
கிழிந்த ஆடையில் மானத்தையும்
தன்பிள்ளைக்கு பால் குடுக்கும் மார்பையும்
மறைக்க முடியாமல் தவிக்கும்
பல பெண்கள் நடைபாதையில்...

தலையில் அடித்தபடி
சற்று தூரம் கடந்தேன்...
சாட்டையில் தன்னை தானே 
அடித்துக்கொண்டு
பிச்சை கேட்டான் ஒருவன்...
 
காக்கிச்சட்டையைக் காட்டி 
சாலையோர  வியாபாரியை 
மிரட்டிக் கேட்கிறான் ஒருவன்

போராடிப் பெற்ற இந்தியா
இன்று பல போரட்டதுக்கிடையில்
வியர்வை சிந்தும் விவசாயி
தண்ணீர் வேண்டி கண்ணீர் மழையில்...
 
விவசாயியின் வியர்வைத் துளிகள்
ஏழையின் கண்ணீர்த்துளிகள்
ஈழத்தமிழனின் ரத்தத்துளிகள்
இவை எவற்றுக்குமே மதிப்பில்லாத போது
ஒரு நாகரீக தமிழச்சியாய்
என் குமுறல்கள் கொந்தளித்தாலும்
பெண் பிள்ளை நீ
பேசாதே என்கிறது சமூகம்
 
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா
 

நாங்கள் கவிஞர்கள் ....


 

Friday, June 28, 2013

இறைவனை கண்டேன்...


இறைவனை கண்டேன்...


கடவுள் எங்கே
என தேடி அலைந்தேன் ...
தேடி தேடி அலைந்ததிலே

தெளிவில்லா முடிவு பெற்றேன் ...


முடிவில்லா பொருளில் எல்லாம்
தொடக்கமே அவன்தான் என்றேன் ...
விடை இல்லா வினாவிர்க்கெல்லாம்
விதி விளக்கே அவன்தான் என்றேன் ...


இயற்கையின் அழகிலெல்லாம்
அவன்தான் இருக்கிறான் என்றேன் ...
இன்பம் துன்பம் இரண்டிலுமே
அவனைதான் நினைவில் கொண்டேன் ...

என்னென்னவோ சொல்லி சொல்லி
இறுதியில் என் மனம் இறுகக் கண்டேன்...
மரணத்தின் மடியில் சாய்வதற்குள்
மனம் உன்னை காண துடிக்கிறது என்றேன் ...


கண்ணிமைக்குள் தேங்கிய நீரோடு
இமை மூடிய தருணத்தில்
இறைவன் என் முன் தோன்றலானான் ...

மெலிதாய் இமை உயர்த்தி
விழி விளித்து நோக்கலானேன் ...
அவன் யான் வணங்கும்
இறைவன் இல்லை ...


மனிதநேயத்தால் மடியாது வாழும்
மனிதன் என்றுணர்ந்தேன் ...
ஓர் அறிவு கொண்ட புல் முதல்
ஆறறிவு கொண்ட மனிதன் வரை
அத்தனை உயிர்களிடமும்
அன்பு கொள்ளும் இதயமே
இறைவன் என்றுணர்ந்தேன் ...
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா
contact : http://www.facebook.com/sathya.rks sathya4u.smart@gmail.com