.jpg)
அன்று ஓர் நள்ளிரவில்
இருகமூடிய கண்களுக்குள்
இறுக்கமாய் ஒரு கனவு ...
ஆளில்லாத நடைபாதையில்
ஆகாயம் தெளித்த
தண்ணீர் மழையில்
நானும் நண்பனும்
இரயில் பாதையை
கடக்க முயன்றோம்...
ஏதோ காலை பிடித்து
இழுத்தார்போல் சட்டென விழுந்தேன்
கால்கள் உணர்ச்சியிழந்து
தொலைவில் தொடர்வண்டி சத்தம்
எமனின் கூக்குரலாய்
என் காதில் ஒலித்தது...
சத்தமிட்டு உன்னை
அழைக்க முடியாமல்
சிறு முனகலுடன் அழைத்தேன்...
முனகல் உணர்ந்தவனாய்
முகம் திருப்பி
என் அகம் கண்டாய்...
என் கண்களும் கரங்களும்
உன்னையன்றி யாரையும்
நம்பவில்லை என்பதுபோல்
கை நீட்டி என்னை
காப்பாற்று என்றேன் ...
என்ன நினைத்தாயோ
தெரியவில்லை
தொடர்வண்டியை நோக்கினாயோ
புரியவில்லை ...
எதையும் அறியாதவனாய்
திரும்பிக்கொண்டாய்
இரக்கமின்றி என் தோழமையை
மௌனமாய் கொன்றாய் ...
மனம் அமைதி கொண்டது
மீளா உறக்கத்திற்கு தயாரானேன்
இரயிலவன் (காலவன்) என்னை
ஏற்றிக்கொண்டான் (கொன்றான்)...
படபடத்த உடலோடு
சட்டென விழித்து
கலங்கிய கண்களோடு
குருதியை உரைய வைத்த கனவை
குறுஞ்செய்தியில் அனுப்பினேன் ...
கொக்கரிக்கும் சிரிப்போடு
கேலி நகையாடி
கனவுதானே என்றாய் ...
நெடுநாள் வளர்த்த நட்பு
நொடியில் கலைந்தது
அக்கனவோடு ...
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...
No comments :
Post a Comment