உப்புசப்போடு சமைத்துப்போட
உள்ளாடைகளை உலர்த்திப்போட
உன் உறவுகளை
உள்ளம் நோகாமல் உபசரிக்க ...
அலசிய கூந்தலையும்
அள்ளி முடிய நேரமின்றி
பரட்டை தலையோடு உன் பெண் பிள்ளைக்கு
ரெட்டை சடை பின்னலிட . . .
நடுநிசியில் துயில்கொண்டு
கதிரவனோடு கண்விழிக்க
எதிர் வீட்டுப் பெண்களிடம்
என் கணவன் போல் வாராதென
உன் புகழ் பாடிட . . .
கூப்பிடும்போது புணர்ந்துகொள்ள
காதலுக்கோ காமத்துக்கோ
நீ பெற்ற பிள்ளைகளை
ஊர் போற்ற வளர்க்க . . .
அத்தனை ஆண்களுக்கும் தேவை
ஓர் அழகிய அடிமை
மனைவி என்ற பெயரில் . . .
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...
.jpg)
No comments :
Post a Comment